உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் மேலரத வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உதவி சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் அகற்றினர்.

சிதம்பரத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-07-24 06:59 GMT   |   Update On 2023-07-24 06:59 GMT
  • நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
  • ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.

கடலூர்:

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News