உள்ளூர் செய்திகள்
- பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- கோவில் இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பழனி:
பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவில் முன்புறம் மற்றும் சன்னதிவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.