உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2023-09-29 11:14 GMT   |   Update On 2023-09-29 11:14 GMT
  • கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.
  • கடைகள் இடிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் விளம்பர போர்டுகள் வைத்து இருந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளின் கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News