'என் குப்பை என் பொறுப்பு' குறும்படம் வெளியீடு
- விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் குறும்படம் எடுக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.
- குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
தமிழ்நாடு அரசு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அறிமுகபடுத்தி எனது குப்பை எனது பொறுப்பு என பிரசாரம் செய்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படம் தமிழகத்தில் உள்ள 380 பேரூராட்சிகளில் முதன் முதலாக கிராமபுரத்தில் அமைந்துள்ள விவசாயிகள் விவசாயதொழிலாளர்கள் நிறைந்த தலைஞாயிறு பேரூராட்சியில் எடுக்கபட்டு வெளியிடபட்டுள்ளது. இந்த குறும்படத்திற்காக ஒரு டன் குப்பை முன்னூறு குப்பைதொட்டிகள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்படு த்தப்பட்டு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டுள்ள. இந்த குறும்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படு த்தப்பட்டு வருகிறது.