உள்ளூர் செய்திகள்

மறுமணம் செய்ய மறுத்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-07-24 13:58 IST   |   Update On 2022-07-24 13:58:00 IST
  • ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
  • மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தாலுகா, தவிட்டுப்பா–ளையத்தை சேர்ந்தவர் சர்புதீன்.இவரது மனைவி சகிலாபானு.

இவர்களது மகள் ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்புதீன் தற்போது தனது குடும்பத்துடன் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் உள்ள காவேரி நகரில் வசித்து வருகிறார்.

சர்புதீன் தனது மகள் ஜெஸ்சியாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக முதல் மனைவியை இழந்த ஒரு மணமகனை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு ஜெஸ்சியா மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஜெஸ்சியா வீட்டின் படுக்கை அறையில் மேல் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் ஜெஸ்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News