உள்ளூர் செய்திகள்

கியாஸ் சிலிண்டருக்கு தமிழ் மொழியில் பதிவு செய்யும் வசதி மீண்டும் அறிமுகம்

Published On 2023-11-05 09:09 GMT   |   Update On 2023-11-05 09:09 GMT
  • தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டதால் பாதிப்பு
  • இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

கோவை,

இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 1-ந் தேதி தொலை தொடர்பு சேவை மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஐ.வி.ஆர்.எஸ். மாநில மொழி தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டது.

தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் தமிழ் மொழியில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து, பதிவு செய்யலாம்.

இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News