உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2023-04-02 14:40 IST   |   Update On 2023-04-02 14:40:00 IST
  • கலெக்டர் உத்தரவு
  • ஜெயிலில் அடைத்தனர்

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறியில் ஈடு பட்ட அரக்கோணம் வெங்கடேசபு ரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கரண் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் குற்ற செயல்களை கட்டுப்ப டுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கரணை கைது செய்ய உத்தர விட்டார்.

இதனையடுத்து கரணை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News