உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2023-11-15 07:39 GMT   |   Update On 2023-11-15 07:39 GMT
  • வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பிஞ்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் நேற்று காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. வீட்டு முன் நிறுத்தப்பட்டி ருந்த பைக் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சசிகுமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பைக் தொடர்பாக சோளிங்கர் தாலுகா ஆயல் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 21)என்பவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News