உள்ளூர் செய்திகள்

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

Published On 2022-07-07 16:17 IST   |   Update On 2022-07-07 16:17:00 IST
  • செங்கல் ஏற்றி சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காளத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி ( வயது 21 ), கூலித்தொ ழிலாளி .

இவர், டிராக்டரில் செங்கல் பாரத்தை ஏற்றிக் கொண்டு சின்னகந்திலியில் உள்ள முருகன் என்பவருடைய நிலத்தில் இறக்கி கொண்டிருந்தார். அப்போது, டிராக்டரில் இருந்து தவறி கீழே தலை குப்புற விழுந்தார்.

அதில் கோவிந்தசாமியின் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயி ரிழந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News