உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-24 15:19 IST   |   Update On 2023-03-24 15:19:00 IST
  • கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருந்ததி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது50). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி ராதா (42). கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜா சம்பவத்தன்று அங்குள்ள ஏரி பகுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக் கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News