உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-07-30 13:41 IST   |   Update On 2023-07-30 13:41:00 IST
  • குடும்ப தகராரில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகன், மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 28).

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆற்காடு அடுத்த கரிவேடு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை வீட்டின் அருகே இருந்த விஷத் தழையை அரைத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு லாட புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந் துவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News