உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Published On 2023-03-14 14:55 IST   |   Update On 2023-03-14 14:55:00 IST
  • கலெக்டர் வழங்கினார்
  • மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள்கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், லவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை கூட்டுறவு கடனு தவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடு கள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடி நீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 486 மனுக்கள் குமார் பெறப்பட்டது. அந்த மனு

களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு தகுதி யானதாக இருப்பின் உடனடி யாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வும் கலெக்டர் உத்தரவிட் டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்து 500 வீதம் சக்கர நாற்காலி, 2 பேருக்கு கைய டக்க திறன்பேசி, ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட் டது.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் லோகநாயகி, துணை கலெக்டர் தாரகேஷ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் சத் திய பிரசாத், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி. மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் சரவணக் குமார்

உள்ளிட்ட அதிகாரி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News