ஆதிதிராவிட பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்பு
அரக்கோணம்:
கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் ஏழை மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 9 மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கே.மகாலட்சுமி, செல்ப் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அம்பேத்ஆனந்தன் பி.ஜேம்ஸ், பா.கேசவன், பெ.பெளத்தரசி ஜி.முருகேசன், கொ.சுந்தரம், க.கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அரக்கோணம் பரமேஸ்வரமங்களம், காவனூர், ஆலப்பாக்கம், குண்ணத்தூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கே.மகாலட்சுமி, அ.பிரின்ஸ்தேவா சீர்வாதம், கே.ரவி, ஏ.டி.தயாநிதி, டி.இளவழகன், ஏ.நித்தியானந்தன் ஆகியோர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கி செல்ப் அறக்கட்டளையை பாராட்டினார். கோட்டாட்சித்தலைவர் பாத்திமா, நகராட்சி ஆணையாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன், அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஆசிர்வாதம், கவிஞர் மு.இஸ்மாயில், கீழ்வீதி தலைமை ஆசிரியர் ஏசுபாதம், உதவி தலைமை ஆசிரியர் கே.முருகன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் தோத்ராவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக சாரணிய வழிகாட்டி ஆசிரியர் இ.ரஜினிப்பிரியா பள்ளிகளுக்கு- மாணவிகளுக்கு-ஆசிரியர்களுக்கு உதவி செய்த அறக்கட்டளை காப்பாளர்கள் ச.வேலாயுதம், வி.பாலாஜி, கே.ராஜேஷ், எம்.பாஸ்கர் ஆகியோர் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.