உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்

Published On 2023-04-28 13:29 IST   |   Update On 2023-04-28 13:29:00 IST
  • செல்போனில் படம் எடுத்து மிரட்டல்
  • போக்சோவில் கைது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அருகே உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் முனாப் (23) வேன் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி இறந்து விட்டார்.

இந்த நிலையில் அப்துல் முனாப் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டு, தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும்,

மேலும் ஊர் முழுவதும் மாணவியை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வேறு யாரையும் திருமணம் செய்ய விடமாட்டேன் என கூறி வந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மாணவியின் தந்தை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அப்துல் முனாப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News