தொழிலாளி வீட்டில் தீயை விரைந்து அணைத்த சப் இன்ஸ்பெக்டர்
- அடுப்பில் இருந்த தீ பரவி எரிந்தது
- தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்
சோளிங்கர்:
சோளிங்கர் பைராகி மடம் தெருவை சேர்ந்தவர் சரளா (37), கூலித் தொழிலாளி. இவரது, வீட்டின் மேல்மாடியில் இருந்த அறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென தீ வி பத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனை வெளியில் இருந்தபடி பார்த்த பொதுமக்கள் சோளிங்கர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வீட்டில்இருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது குறித்து தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து மாடிக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், எரிந்து கொண்டி ருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டடது. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித அசம் பாவிதமும் ஏற்படவில்லை.
விசாரணையில், வெந்நீர் காய வைப்பதற்காக மாடி மீது அடுப்பு பற்ற வைத்துவிட்டு, நெருப்பை சரியாக அணைக்காமல் விட்டுள்ளனர். இதனால், அடுப்பில் இருந்த நெருப்பு பரவி விறகுகளில் தீப்பிடித்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பின்னர் திரும்பி சென்று விட்டனர். உரிய நேரத்தில் விரைந்து வந்து தீயை அணைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.