பொதுமக்கள் மீது கற்கள் வீசிய வாலிபர் கைது
- பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கு
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி எம் பி டி ரோடு பகுயை சேர்ந்தவர் சீனு என்கிற சீனிவாசன் (வயது 26) இவர் தனியார் கம்பெனி நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று சீனு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கற்களை எடுத்து வாகனத்தில் செல்பவர்கள் மீது எறிந்து இடையூறு செய்தார்.
அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தது கைது செய்தனர்.