உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று காலை பிரியாணி வாங்க வந்துள்ளார் .
அப்போது அந்த கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது . அந்த வேளையில் ராஜேஷின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்சை அடையாளம் தெரியாத நபர் எடுத்துக் கொண்டு ஓடி உள்ளார் .
இதனை கண்ட ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர் .
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் சிவா ( வயது 30 ) என்பது தெரிய வந்தது . அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .