தமிழகத்தில் தாட்கோ தனி வங்கி ஏற்படுத்த வேண்டும்
- இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) தமிழ்நாடு, மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கருமலை தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் என்.பி.வெங்கடேசன், பொதுச்செயலாளர் என்ஜினீயர் கே.பி. ஆறுமுகம், செயல் தலைவர் எம்.சிவன், பொருளாளர் எம். அண்ணாமலை, அமைப்பு செயலாளர் வி.எஸ்.குமரேசன், கொள்கை பரப்பு செயலாளர் எம்.கே.கே.வேலுசாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஏ.மாரியப்பன், கே.ஆர். அண்ணாதுரை, பி.எஸ்.மணியன், தலைமை நிலைய செயலாளர் சி. ஏழுமலை, துணை செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், ஏ. கருணாகரன், டி.ராஜ்குமார், பி.சேட்டு, இளைஞரணி துணைத்தலைவர் வி.சம்பத், தொழிற்சங்க துணை செயலாளர் பி. பழனி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆர்.முரளி குமார் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் ஏலகிரி எச்.கோபிநாதன், கடலூர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
போலி சான்றிதழ் தமிழகம் முழுவதும் ஆதி திராவிட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. இந்த பஞ்சமி நிலங்களை அவர்களை தவிர வேறு நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக அனுபவித்து வருகிறார்கள்.
இதனை மீட்டெடுக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சட்டசபையில் அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் பெயரில் போலி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்கும் அதிகாரிகளையும், முறைகேடாக சான்றிதழ் பெறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ தனி வங்கி எஸ்.சி., எஸ்.டி. மக்கள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தில் முன்னேற தாட்கோ திட்டத்தின் தமிழகத்தில் தாட்கோ தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிராக சாதிய கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவத்தில் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் மாநில கவர்னரை இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) நிர்வாக குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்