உள்ளூர் செய்திகள்

சுந்தர விநாயகர் கோவில் தேரோட்டம்

Published On 2023-09-19 09:53 GMT   |   Update On 2023-09-19 09:53 GMT
  • சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது
  • பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்த‌னர்

ராணிப்பேடட்டை:

வாலாஜா நகரில் அணைக்கட்டு சாலையில் பழமைவாய்ந்த ஸ்ரீ சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ரூ.25 லட்சம். மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடைக்கொண்ட தேர் செய்யப்பட்டு கடந்த 10-ந் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.

பின்னர் மாலையில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது.அலங்கரிங்கப்பட்ட நேரில் சுந்தரவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மங்கல வாத்தியங்களுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது .

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News