உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
வாலாஜாவில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்த வர் பாலு . இவரது மகன் விக் னேஷ் (வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மன உளைச்சல் காரணமாக வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின்பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.