உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி முகாமில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டரை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கிய போது எடுத்த படம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

Published On 2022-08-24 15:36 IST   |   Update On 2022-08-24 15:39:00 IST
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
  • ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 81 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

47 பேருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 53 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 77 பேருக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 700 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News