மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
- நாளை நடக்கிறது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகள் நல முகாம் நடக்கவுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) ஆற்காடு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி முகாம் நடக்கிறது. 20-ந் தேதி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியி லும், 24-ந் தேதி காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
25-ந்் தேதி நெமிலி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 27-ந் தேதி சோளிங்கர்அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
பிப்ரவரி 1-ந் தேதி வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியிலும், 2-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாற் றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடக்கவுள்ளது.முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 2 மணிவரை அந்தந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தி றனாளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டை நகல், 6 போட்டோ, குடும்ப அட்டை நகல், பழைய தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இம்முகாமில் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அட்டை, பராமரிப்பு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள், பஸ் பயண சலுகை அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, பெற்றோர்க ளுக்கான வங்கிக்கடன் ஆகிய திட்டங்களில் பயன் வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்து ள்ளார்.