உள்ளூர் செய்திகள்

கடையில் குட்கா பறிமுதல்

Published On 2022-09-13 09:46 GMT   |   Update On 2022-09-13 09:46 GMT
  • 50 போதை பாக்கெட்டுகள் சிக்கியது
  • வியாபாரி மீது வழக்கு பதிவு

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய கூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவலூர் போலீசார் ஏழுமலை மற்றும் சவுந்தர்ராஜன் அங்குள்ள கடைகளில் சோதனை ஈடுபட்ட போது அங்குள்ள ஒருவர் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்று அறிவித்தம் சில பேர் பணம் சம்பாதிக்கும் லாப நோக்கில் மறைமுகமாக விற்பனை செய்கின்றனர். அவர் மீது நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News