உள்ளூர் செய்திகள்
- விறகு எடுக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் பைரவா காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி.
இவருடைய மகள் வகிதா. பாணாவரத்தில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டிற்கு விறகு எடுத்து வருவதற்காக அப்பகுதியில் உள்ள காய்ந்து போன மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பாணாவரம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக வகிதா மீது ேமாதியது.
இதில் கை, கால் துண்டான நிலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.