உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சாலை தடுப்புகளை வழங்கிய காட்சி.

10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் சாலை தடுப்புகள்

Published On 2023-06-18 08:20 GMT   |   Update On 2023-06-18 08:23 GMT
  • மொத்தம் 66 வழங்கப்பட்டது
  • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சாலை தடுப்பாண்கள்- 48 மற்றும் சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள்- 18 என மொத்தம் 66 போக்குவரத்து தடுப்பாண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள சீக்கராஜாபுரம் சோதனைச் சாவடிக்கு-7, அரும்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-4, தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-6, அரப்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-8, சில்வர்பேட்டை சோதனைச் சாவடிக்கு-7, ரெட்டைகுளம் சோதனைச் சாவடிக்கு-8, புதுகேசவபுரம் சோதனைச் சாவடிக்கு-6, பள்ளூர் சோதனைச் சாவடிக்கு-6, பிள்ளாஞ்சி சோதனைச் சாவடிக்கு-6 பொன்னியம்மன் பட்டரை சோதனைச் சாவடிக்கு-8 என மொத்தம் 10 சோதனைச் சாவடிகளுக்கும் சமந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஒப்படைத்தார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News