உள்ளூர் செய்திகள்
ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது,
கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.