உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-11-15 07:46 GMT   |   Update On 2023-11-15 07:46 GMT
  • காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது
  • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News