உள்ளூர் செய்திகள்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
- போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு:
ஆற்காடு அருகே லப்பபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மதியம் லப்பபேட்டையில் இருந்து ஆற்காடு வரும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது.