உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி மூதாட்டி சாவு

Published On 2022-12-26 15:45 IST   |   Update On 2022-12-26 15:45:00 IST
  • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் - இச்சிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே அரக்கோணம் ரெயில் மார்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக நேற்று காலை அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணமாகக் கிடந்த உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்த பெண் அரக்கோ ணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த விமலா (60) என்பதும், ரெயில் மோதி பலியானதும் தெரியவந்து. 

Tags:    

Similar News