உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
- தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- கலவையில் 75.4 மி.மீ. மழை கொட்டியது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.அதிகபட்சமாக கலவையில் 75.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆற்காடு, காவேரிப்பாக்கம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது.
நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தெருக்களின் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆற்காடு-20.4, காவேரிப்பாக்கம்-27, வாலாஜா-8.7, அம்மூர்-9, சோளிங்கர்-12, கலவை-75.4.