உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் ரூ.1.50 லட்சம் குட்கா பறிமுதல்
- காரில் 15 மூட்டைகளாக கட்டி வைத்து கடத்தல்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா போலீசார் சென்னை - பெங்களூரு சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . சென்னை நோக்கி வந்த காரை போலீசார் சோதனையிட்டனர்.
அதில் 15 மூட்டைகளில் 150 கிலோ ஹான்ஸ் புகையிலை, குட்கா இருந்தன.இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்லப்படுவது தெரிய வந்தது . இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாலிமார் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான கோபால்சிங் மகன் மகாவீர் சிங் ( வயது 24 ) , ராஜஸ்தான் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சோடா மகன் சந்திரராம் ( 23 ) ஆகியோரை கைது செய்து காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட புகையிலை , குட்கா பொருட்களின் மதிப்பு ரூ .1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.