உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-08-29 09:40 GMT   |   Update On 2022-08-29 09:40 GMT
  • 150-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
  • தலைமையாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர்

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சியில் 1951-ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கடந்த 1984-85ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அப்பள்ளியில் படித்த 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று அரசு மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் சுயதொழில் புரிபவர்கள் என பலரும் சந்தித்து பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

பலரும் தங்களது நண்பர்களுடன் செல்பி எடுத்தும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்தனர். முன்னதாக காலையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி காலத்தில் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி தலைமை யாசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

Tags:    

Similar News