உள்ளூர் செய்திகள்
மலை அடிவாரத்தில் மண் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளம்
- வருவாய்த்துறையினர் நடவடிக்கை
- முரம்பு மண் கடத்துவதாக புகார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த குமரகிரி மலை அடிவாரத்தில் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் முரம்பு மண் கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆற்காடு தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மண் கடத்துவதை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டினர்.