உள்ளூர் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகி நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-01-08 14:28 IST   |   Update On 2023-01-08 14:28:00 IST
  • உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
  • 500 பேருக்கு அன்னதானம்

அரக்கோணம்:

அரக்கோணத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அமரர் வி.ராஜகோபால் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. சுவால்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு நகர த.மா.கா. தலைவரும் முன்னாள் துணை சேர்மனுமான கே.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

சமூக ஆர்வலர்கள் ஆர்.வெங்கட்ராமன் த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜி. மோகன் காந்தி ஆகியோர் முன்னிலையில் தியாகி ராஜகோபால் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் த.மா.கா. மாவட்ட தலைவர் ஆர்.ஹரிதாஸ் தியாகி ராஜகோபால் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் ஸ்ரீதரணி, முன்னாள் கவுன்சிலர் பி.உத்தமன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், முனுசாமி, தேவேந்திரன், ரவி, அனந்தராமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பிரதிநிதி சாமிதுரை, காங்கிரஸ் நகர தலைவர் பார்த்தசாரதி, காவேரிப்பாக்கம் நகர தலைவர் உதயகுமார், முன்னாள் திமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News