உள்ளூர் செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி உற்சவம்
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தங்க கேடயத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.