உள்ளூர் செய்திகள்

கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Published On 2023-04-24 12:17 IST   |   Update On 2023-04-24 12:17:00 IST
  • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம், பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து.

கழிவுநீர் கால்வாய் உயர்த்தி தளம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பணா, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏ.எம். முனிரத்தின எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

அப்போது தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு பணி செய்ய வேண்டும்.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளூர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.அப்போது காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ராஜா, காங்கிரஸ் பட்டறை மணி, ஒப்பந்ததாரர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News