உள்ளூர் செய்திகள்

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-06-03 08:16 GMT   |   Update On 2023-06-03 08:16 GMT
  • சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வழிகாட்டுதல் படி , இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி ஆகியவை குறித்தும் ,சைபர் கிரைம் உதவி எண் 1930 பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News