உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

Published On 2023-06-13 10:07 GMT   |   Update On 2023-06-13 10:07 GMT
  • போலீசார் உறுதிமொழி ஏற்றனர்
  • அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போலீசார் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா,குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் "குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி" ஏற்கப்பட்டது.

Tags:    

Similar News