அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு எதிரொலியாக நடந்தது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வெளியிட்டது தொடர்ந்து ராணிப்பேட்டை முத்துகடை பஸ் நிறுத்தத்தில் நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மேளதாளம் முழுக்க பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷாபூதின், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் பூங்காவனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனுசாமி, நகர அவைதலைவர்கள் மணி, குமரன் வாலாஜா ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, நகர மன்ற உறுப்பினர்கள் முரளி, சுரேஷ், ஜோதி சேதுராமன், ராணிப்பேட்டை நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது உமர் பாரூக் உள்பட மாவட்ட நகர ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.