டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் பலி
- கணவர் உள்பட 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
தர்மபுரியை சேர்ந்தவர் பாலாஜி ( வயது 42 ) . இவரது மனைவி கவிதா ( 41 ) . இவர்களது மகன் தருண்வர்ஷன் ( 18 ) .
இவர் சென் னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்துள் ளார் . அதற்கான சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று முன்தி னம் காலை காரில் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு புறப் பட்டனர். காரை நேதாஜி என்பவர் ஓட்டிச்சென்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி மேம்பாலத்தில் சென்றபோது, காருக்கு முன்னால் மணல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது . இந்த லாரி மீது திடீ - ரென கார் மோதியது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு - மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கஸ்தம்பாடியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பிரபு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு . செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.