உள்ளூர் செய்திகள்

பஸ்கள் மோதி விபத்து

Published On 2022-11-12 13:22 IST   |   Update On 2022-11-12 13:22:00 IST
  • 22 பேர் காயம்
  • வளைவில் திரும்பிய போது மோதியது

சோளிங்கர்:

வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பஸ் சென்று கொண்டிரு்தது. சோளிங்கரை அடுத்த கொடைக்கல்- பெருங்காஞ்சி ஏரிக் கரை இடையே உள்ள வளைவு பகுதியில் சென்றபோது, சோளிங்க ரில் இருந்து வாலாஜா நோக்கி சுற்றுலா பஸ் ஒன்று வந்தது.

இந்த 2 பஸ்களும் மோதி க்கொண்டன. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சோளிங் கர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்ப ட்டனர்.

அவர்களில் அரசு பஸ் டிரைவர் கண்ணன், முருகேசன், பர்வேஸ், பரமேஸ்வரி ஆகிய 4 பேர் வேலூர் அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் களை அரக்கோணம் உதவி போலீஸ்சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

Tags:    

Similar News