ஏரியில் மூழ்கி பலியான தந்தை, மகன் உடல்கள் மீட்பு
- மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47) கூலி தொழிலாளி. இவரது மகன் பரத் (13) இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தந்தை மகன் இருவரும் நேற்று மாலை நந்தியாலம் ஏரியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பரத் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்தான். இதனைகண்ட ஆறுமுகம் தனது மகனை காப்பாற்ற ஏரியில் குதித்தார். எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு தந்தை மகன் உடல்கள் மீட்கப்பட்டன. இருவரது உடல்களும் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மீன் பிடிக்க சென்ற தந்தை மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.