என் மலர்
நீங்கள் தேடியது "ஏரியில் மூழ்கி சாவு"
- மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47) கூலி தொழிலாளி. இவரது மகன் பரத் (13) இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தந்தை மகன் இருவரும் நேற்று மாலை நந்தியாலம் ஏரியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பரத் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்தான். இதனைகண்ட ஆறுமுகம் தனது மகனை காப்பாற்ற ஏரியில் குதித்தார். எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு தந்தை மகன் உடல்கள் மீட்கப்பட்டன. இருவரது உடல்களும் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மீன் பிடிக்க சென்ற தந்தை மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- மீன் பிடித்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம் பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலகதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாய கூலி தொழிலாளி.
இவரதுமகன் பிரதீஷ் ( வயது 12 ). பழையபாளையம் அரசு பள்ளியில் 7 - ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் விவசாய கூலி தொழிலாளி. இவ ரது மகன் அன்பரசு ( 15 ) , பாணாவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வந்தான். இருவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருவதால் சிறுவயது முதல் நண்பர்க ளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று விடு முறை என்பதால் அருகில் உள்ள ஏரிக்கு சென்று கரை யின் ஓரத்தில் அமர்ந்து மீன் பிடித்தனர். அப்போது கால் வழுக்கி ஏரி யில் விழுந்து நீரில் முழ்கிய தாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து ஓடிவந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு பிரதீஷை பாணாவரம் அரசு மருத்துவமனையிலும், அன்ப ரசை தனியார் மருத்துவம னையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாணவர் கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பூப்பறிக்க சென்ற போது ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
- நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்கொட்டப்பா (வயது 70).
பூ வியாபாரியான இவர் கடந்த 1-ந்தேதி பூப்பறிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






