என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
- மீன் பிடித்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம் பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலகதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாய கூலி தொழிலாளி.
இவரதுமகன் பிரதீஷ் ( வயது 12 ). பழையபாளையம் அரசு பள்ளியில் 7 - ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் விவசாய கூலி தொழிலாளி. இவ ரது மகன் அன்பரசு ( 15 ) , பாணாவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வந்தான். இருவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருவதால் சிறுவயது முதல் நண்பர்க ளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று விடு முறை என்பதால் அருகில் உள்ள ஏரிக்கு சென்று கரை யின் ஓரத்தில் அமர்ந்து மீன் பிடித்தனர். அப்போது கால் வழுக்கி ஏரி யில் விழுந்து நீரில் முழ்கிய தாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து ஓடிவந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு பிரதீஷை பாணாவரம் அரசு மருத்துவமனையிலும், அன்ப ரசை தனியார் மருத்துவம னையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாணவர் கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






