உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை நடந்த காட்சி.

தார் சாலை, சிறுபாலம் அமைக்க பூமி பூஜை

Published On 2023-03-17 15:21 IST   |   Update On 2023-03-17 15:21:00 IST
  • ரூ.1.37 கோடியில் கட்டப்படுகிறது
  • நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏற்பாடு

ஆற்காடு:

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.137.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை,சிறுபாலம், கழிவுநீர் கால்வாய், அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தார், நகராட்சி கமிஷனர் பார்த்த சாரதி, துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் குணாளன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட பொருளாளர் சாரதி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்தனர்.

நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் பொன் ராஜசேகரன், ஆனந்தன், காமாட்சி பாக்கியராஜ்,அனு அருண்குமார், விஜயகுமார், ராஜலட்சுமி துரை, தட்சிணாமூர்த்தி, முனவர் பாஷா மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வாசி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அன்பழகன், தீயணைப்பு துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 20-வது வார்டு பார்த்தீபன் நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பூங்கா அமைக்கும் பணிகளை ஈஸ்வரப்பன் எம் எல் ஏ,நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News