உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
- திருமணமாகததால் விரக்தி.
- மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
வாலாஜா:
வாலாஜாபேட்டை ராயாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27) ஆட்டோ டிரைவர்.இவருக்கு தொழில் சரிவர அமையாததாலும் சரியான வருமானம் இல்லாததாலும் திருமணமாகவில்லை என வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் சாத்துப்பாக்கம் கிராமத்திற்கு சென்ற சதீஷ் அங்கிருந்த பெருமாள் கோயில் எதிரில் நேற்று முன்தினம் மண்எ ண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வாலாஜா போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.