உள்ளூர் செய்திகள்
மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கலை நிகழ்ச்சி
- டிஐஜி சாந்தி ஜெய்தேவ் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதை
- பல்வேறு பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய பாதுகாப்பு பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும் பின்னர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய தொழிற்ப பாதுகாப்பு படை உதயமான நாளான இன்று இதற்கான விழா காலையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர் டிஐஜி சாந்தி ஜெய்தேவ் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் ஏற்றுக்கொண்டார். மேலும் இங்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டு வரும் பல்வேறு பிரிவுகளான வீரர்கள் கலந்து கொண்டனர்.