உள்ளூர் செய்திகள்

வாலாஜாவில் பா.ம.க பொதுக்கூட்டம்

Published On 2023-07-17 09:43 GMT   |   Update On 2023-07-17 09:43 GMT
  • 35-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு நடந்தது
  • தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், வாலாஜாவில் பா.ம.க. கட்சி 35-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜானகிராமன், தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க . மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகைதீன், தலைமை நிலைய பேச்சாளர் தினபுரட்சி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில ,மாவட்ட ,நகர, ஒன்றிய கிளைகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News