உள்ளூர் செய்திகள்

மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் முகாம்

Published On 2022-11-29 14:43 IST   |   Update On 2022-11-29 14:43:00 IST
  • சோளிங்கர் மின்வாரிய அலு வலகத்தில் நடந்தது
  • மின் பணியாளர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்

சோளிங்கர்:

சோளிங்கர் மின்வாரிய அலு வலகத்தில் மின் இணைப்பு டன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சோளிங்கர் உதவி செயற் பொறியாளர் சங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் வீடு, கைத்தறி, விசைத் தறி, வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்புதாரர்கள் தங்கள் மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைத்தனர்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்கட்டன அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எடுத்துவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இளநிலை மின் பொறியாளர் மோகன் ராஜ், ஜெயபாரதி, முகவர்கள் ரமேஷ், சரவணப் பெருமாள் மற்றும் மின் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News