உள்ளூர் செய்திகள்

மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு

Published On 2023-06-14 08:49 GMT   |   Update On 2023-06-14 08:49 GMT
  • 2 பேர் போக்சோவில் கைது
  • சிறையில் அடைப்பு

ராணிப்பேட்டை:

ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் இருவரும் காலையில் வேலைக்காக வீட்டை விட்டு சென்று, இரவு வீடு திரும்புவது வழக்கம்.

அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் சிறுமியின் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் சென்று தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதை வெளியில் கூறினால் உன் அப்பா, அம்மாவை ஒழித்துவிடுவேன் என மிரட்டி அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் முனியாண்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். முனியாண்டி சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரும், சிறுமியிடம் தொந்தரவில் ஈடுபட்டது தெரிந்தது.

கடந்த சில நாட்களாக வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப் - இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டி மற்றும் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News